மோடிக்கு குடை பிடிக்கும் அதிபர்கள்

தினமலர்  தினமலர்
மோடிக்கு குடை பிடிக்கும் அதிபர்கள்

பிஷ்கெக் : சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா குடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.


சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூறவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு அதிபரே பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.


இதேபோல் இலங்கையின் கொழும்புவுக்கு பிரதமர் மோடி சென்ற போது மழை தூறியதால் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனாகுடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை