அமெரிக்காவிலிருந்து இறக்குமதி கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா

தினமலர்  தினமலர்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா

புதுடில்லி:அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 29 வகையான பொருட்களுக்கு, நாளை முதல் சுங்க வரியை அதிகரிப்பது என, இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 29 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிப்பு, நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

மூலக்கதை