தொழில் துறை – அரசு இடையே நம்பிக்கை குறைபாடுகள் இல்லை

தினமலர்  தினமலர்
தொழில் துறை – அரசு இடையே நம்பிக்கை குறைபாடுகள் இல்லை

புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., நடத்திய, தேசிய மாநாட்டில் பங்கேற்ற, நிதின் கட்கரி மேலும் கூறியதாவது:அரசு – தொழில் துறை இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை. தொழில் துறையினர், அரசுடன் கைகோர்த்து, புதுமையான வழிகளில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.நுண், சிறு, குறு நிறுவனங்கள் துறையில், பெரு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை