தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம்

தினமலர்  தினமலர்
தொழில் துறை உற்பத்தி உயர்வு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவீதம்

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வளர்ச்சி ஆகும்.



ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு எரிசக்தி உற்பத்தி, சுரங்க உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் முக்கிய காரணமாகும். இந்த இரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி, 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.



சுரங்க துறை, கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்த 3.8 சதவீதத்தை விட, அதிகரித்து, 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.எரிசக்தி துறை, கடந்த ஆண்டு ஏப்ரலில், 2.1 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில், 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபரில், தொழில் துறை உற்பத்தி, 8.4 சதவீதமாக இருந்தது.

மூலக்கதை