இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் புதிய திட்டம்

தினமலர்  தினமலர்
இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் புதிய திட்டம்

புதுடில்லி:அரசு மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்கும் வகையில், புதிய திட்டம் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.



இதன்படி, நிறுவனங்களின் செயல் சாரா இயக்குனர்களுக்கு, அடிப்படையான நிறுவன சட்டங்கள், மூலதன சந்தை நெறிமுறைகள், நிறுவனங்களின் நன்னெறி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, தேர்வு நடத்தப்படும்.தேர்வு இதன் அடிப்படையில், இயக்குனர் பதவிக்கு வருபவர்கள் குறித்து, மதிப்பீடு செய்யப்படும்.



இது குறித்து, நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர், இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில், செயல் சாரா இயக்குனர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இத்தகைய செயல்சாரா இயக்குனர்கள், இனி தேர்வுகளில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே, அவர்கள் அப்பதவியை வகிக்க முடியும்.மோசடிகளை தடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இல்லை என்று, பொதுவாக கருதப்படும் போக்கை, நாங்கள் தகர்க்க முயற்சிக்கிறோம்.



மதிப்பீடுநிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம், அவர்களுடைய கடமைகள் என்ன, பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரிய வரும்.இந்த தேர்வானது, ஆன்லைனில் நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். இந்திய நிறுவனங்கள் சட்டம், மூலதன சந்தை விதிமுறைகள் போன்றவை குறித்து, தேர்வுகள் நடத்தப்படும்.


வரம்பு



இயக்குனராக விருப்பப்படும் நபர்கள், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இந்த தேர்வை எழுதி, தேர்வாக வேண்டும். ஆனால், அந்த கால வரம்புக்குள், அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.அனுபவம் மிக்க இயக்குனர்கள், தேர்வு எழுத தேவையில்லை. அவர்கள் தங்கள் பெயரை அரசிடம் பதிவு செய்து கொண்டால் போதுமானது.சிறந்த இயக்குனர்களை தேடும் நிறுவனங்களுக்கு, அவர்களை அடையாளம் காண, இந்த தேர்வு ஒரு வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


செயல் சாரா இயக்­கு­னர்­கள்



செயல் சாரா இயக்­கு­னர்­கள் ஒரு நிறு­வ­னத்­துக்கு வழி­காட்­டி­யாக இருப்­ப­வர்­கள். நிறு­வ­னத்­தின் நம்­பிக்கை, நிர்­வாக தரம் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­தும் பொறுப்பு கொண்­ட­வர்­கள். சிக்­க­லான கால­கட்­டத்­தில்,அதை தீர்க்­கும் பணி­யில் முக்­கிய பங்­காற்­று­ப­வர்­கள்.பட்­டி­ய­லி­ட ­ பட்ட நிறு­வ­னங்­களில், மொத்த இயக்­கு­னர்­கள் எண்­ணிக்­கை­யில் மூன்­றில் ஒரு பங்கு செயல் சாரா இயக்­கு­னர்­க­ளாக இருப்­பர். பட்­டி­ய­லி­டப்­ப­டாத நிறு­வ­னங்­களில், சில சூழ்­நி­லை­களை பொறுத்து குறைந்­த­பட்­சம் இரு­வர் அமர்த்­தப்­ப­டு­வர்.

மூலக்கதை