எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்
மதுரை: ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எரிவாயு குழாய் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.