சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் வருடம்தோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் நாளை (12ம் தேதி) பிரதிஷ்டை தினம் ஆகும்.

இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார்.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் நடைபெறும்.

நாளை இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

16 முதல் 20ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

20ம் தேதியுடன் ஆனி மாத பூஜைகள் நிறைவடையும்.

.

மூலக்கதை