தமிழகம் முழுவதும் பள்ளிகள் 3-ந் தேதி திறப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் 3-ந் தேதி (நாளை) திறக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. 

தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் கடும் வெயில் காரணமாக நாளை பள்ளிகளை திறக்கப் போவதில்லை என அறிவித்து உள்ளதாகக்  கூறப்படுகிறது. 

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மூலக்கதை