வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவிக்கிறார். வாரணாசியில் வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனர். சாலையின் இருபுறமும் குவிந்திருந்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதன்பின், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.