ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

தினமலர்  தினமலர்



மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்கிகோவில், சியாரா கோர்டா மலை பிரதேசத்தில், கடந்த வாரம் தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில், ராணுவ ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது. ஜாபலான் டி லா சியாரா நகரின் மேல் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு, காட்டுப்பகுதியில் விழுந்தது. இதில், ஆறு பேர் இறந்தனர்

மூலக்கதை