இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார் மேரி கோம்

தினகரன்  தினகரன்
இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார் மேரி கோம்

டெல்லி: இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி 60 கிலோ எடை பிரிவில் 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

மூலக்கதை