10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு; கருத்து கணிப்பு முடிவுகளால் பங்கு சந்தையில் எழுச்சி

தினமலர்  தினமலர்
10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு; கருத்து கணிப்பு முடிவுகளால் பங்கு சந்தையில் எழுச்சி

மும்பை: தேர்­த­லுக்கு பிந்­தைய கருத்­துக் கணிப்­பில், பா.ஜ., தனிப் பெரும்­பான்­மை­யு­டன் மீண்­டும் ஆட்சி அமைக்­கும் என தெரிய வந்­ததை அடுத்து, நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­கள், மிகப்பெரிய அள­விற்கு எழுச்சி கண்­டன.

அதிக அள­வில், பங்­கு­கள் கைமா­றி­ய­தால், மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 1,421 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 39,352.67 புள்­ளி­களில் நிலை கொண்­டது. பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பின், முதன் முறை­யாக இந்த அள­விற்கு, புள்­ளி­கள் அதி­க­ரித்­துள்­ளன. இதன் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­களில், முத­லீட்­டா­ளர்­கள் வசம் உள்ள பங்­கு­க­ளின் சந்தை மதிப்பு, ஒரே நாளில், 5.33 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.

தொடர்ந்து மூன்று வர்த்­தக தினங்­க­ளாக, மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் குறி­யீடு உயர்ந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களில் மேற்­கொண்ட முத­லீட்டு மதிப்பு, மூன்று நாட்­களில், 7.48 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று, தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 421.10 புள்­ளி­கள் உயர்ந்து, முதன் முறை­யாக, 11,828.25 புள்­ளி­களை எட்­டி­யது.

நம்பிக்கை:
நேற்று, இந்­திய பங்­குச் சந்­தை­களில், பஜாஜ் ஆட்டோ, இன்­போ­சிஸ் தவிர்த்து, அனைத்து நிறு­வ­னப் பங்­கு­களும், அதிக அள­வில், விலை உயர்­வு­டன் கைமா­றின. இது குறித்து, கோடக் இன்ஸ்­டி­டி­யூ­ஷ­னல் ஈக்­யுட்­டிஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த, 17வது லோக்­சபா தேர்­த­லில், பா.ஜ., தலை­மை­யி­லான, தேசிய ஜன­நா­யக கூட்­டணி, மீண்­டும் ஆட்சி அமைக்­கும் என, கருத்­துக் கணிப்­பு­கள் தெரி­வித்­து உள்­ளன.

அத­னால், மத்­திய அர­சின் கொள்­கை­களும், திட்­டச் செயல்­பா­டு­களும் மாற்­ற­மின்றி தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முக்­கி­ய­மாக, மத்­தி­யில் நிலை­யான ஆட்சி அமை­யும் என்ற நம்­பிக்கை, இந்­திய பங்­குச் சந்­தை­க­ளின் எழுச்­சிக்கு வித்­திட்­டுள்­ளது. முத­லீட்­டா­ளர்­கள், அதிக அள­வில் பங்­கு­களில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். தேர்­தல் முடி­வு­கள், 23ம் தேதி வெளி­யாக உள்­ளன. அது­வரை, பங்­குச் சந்­தை­களில் மித­மான ஏற்­றம் காணப்­படும். கருத்­துக் கணிப்பை ஒட்­டியே, தேர்­தல் முடி­வு­களும் அமைந்து விட்­டால், பங்­குச் சந்­தை­கள் மேலும் எழுச்சி காணும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ரூபாய் மதிப்பு கிடு கிடு:
* நேற்று, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 58 காசு­கள் அதி­க­ரித்து, 70.23ல் இருந்து, 69.65 ஆக உயர்ந்­துள்­ளது.
* வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் நிதி நெருக்­க­டிக்கு, ரிசர்வ் வங்கி தீர்வு திட்­டத்தை அறி­விக்க உள்­ள­தாக தக­வல் வெளி­யா­ன­தால், அந்­நி­று­வன பங்­கு­கள் விலை உயர்ந்­தது.
* இந்­தியா புல்ஸ் ஹவு­சிங் பைனான்ஸ், டி.எச்.எப்.எல்., நிறு­வன பங்­கு­கள், 10 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான விலை உயர்­வைக் கண்­டன.
* வீட்டு வசதி கடன் வழங்­கும், கிருஹ் பைனான்ஸ், எல்.ஐ.சி., ஹவு­சிங் பைனான்ஸ், ரெப்கோ ஹோம், ரிலை­யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு­வன பங்­கு­கள் விலை­யும் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் அதி­க­ரித்­துள்­ளது.

மூலக்கதை