ஆந்திராவில் இயந்திர கோளாறு, எண்ணிக்கையில் குளறுபடி விசாகப்பட்டினம் வடக்கு, காகுளம் தொகுதியில் முடிவுகள் நிறுத்தி வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் இயந்திர கோளாறு, எண்ணிக்கையில் குளறுபடி விசாகப்பட்டினம் வடக்கு, காகுளம் தொகுதியில் முடிவுகள் நிறுத்தி வைப்பு

திருமலை: ஆந்திராவில் இயந்திர கோளாறு மற்றும் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதால் விசாகப்பட்டினம் வடக்கு, காகுளம் தொகுதியில் தேர்தல் முடிவுகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களிலும், ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களிலும் சிவசேனா 1 இடத்தில்  வெற்றி பெற்றதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விசாகப்பட்டினம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சராக இருந்த கண்டா சீனிவாஸ்  போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கே. கே. ராஜீ என்பவர் போட்டியிட்டார்.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 14, 64, 122, 244 என்ற ஆகிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்  தொழில்நுட்ப கோளாறு காரணமாக எண்ணப்படவில்லை.

இதுதவிர 42 எண் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் 371 வாக்குகள் பதிவாகியுள்ள  நிலையில் 107 வாக்குகள் மட்டுமே இயந்திரம் காண்பித்தது.

இதுதவிர இயந்திரத்தில் பதிவான வாக்கும், விவிபேட்டிலும் பதிவான வாக்கிலும்  வித்தியாசம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணைய வெப்சைட்டில் கண்டா சீனிவாஸ் 2439 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக  பதிவாகியுள்ளது.

அதேபோல் காகுளம் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ராம்மோகன் 6888 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில்  இருந்தார். மேலும் தபால் வாக்குகளில் 6 ஆயிரம் வாக்குகள் பல்வேறு காரணங்களை கூறி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  விவிபேடிற்கும், இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரிகள் விசாகப்பட்டினம் வடக்கு மற்றும் காகுளம் சட்டப்பேரவை தொகுதி முடிவுகளை  நிறுத்திவிட்டனர்.


.

மூலக்கதை