செருப்பை கொடுத்து மக்களை அவமதிக்கிறார் ஸ்மிருதி இரானி: பிரியங்கா காந்தி பேச்சு

தினகரன்  தினகரன்
செருப்பை கொடுத்து மக்களை அவமதிக்கிறார் ஸ்மிருதி இரானி: பிரியங்கா காந்தி பேச்சு

அமேதி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் உள்ள வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதி மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் யாரிடமும் யாசகம் பெற மாட்டார்கள். அவ்வாறு யாராவது ஒருவர் யாசகம் பெற்றால் அது கூட பாஜவாக தான் இருக்கும். உங்கள் ஓட்டுக்காக  யார் உங்களிடம் யாசகம் கேட்கிறார்கள். ஸ்மிருதி இரானி வெளியாள். அவர் அமேதி மக்களுக்கு காலணிகளை வழங்குகிறார். இவ்வாறு செய்வதன் மூலமாக ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என அவர் நினைக்கிறார். ஆனால்  உண்மையில் மத்திய அமைச்சர் இரானி அமேதி தொகுதி மக்களை தான் அவமதிக்கிறார்.இந்த தொகுதி மக்கள் விவேகமுள்ளவர்கள். அமேதியில் உணவு பூங்கா இப்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை திறக்கப்போவது யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

மூலக்கதை