இறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, உடனடியாக நிறுத்தவில்லை எனில், பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என, இந்தியா, சீனா உட்பட ஐந்து நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரானிடம் இருந்து, இந்தியா உட்பட, பல்வேறு உலக நாடுகள், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதையடுத்து, அந்நாட்டுடன், மற்ற நாடுகளுக்கு உள்ள வர்த்தக உறவை சீர்குலைக்கும் முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்தியா, சீனா உட்பட, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளும், தங்கள் இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் என, அமெரிக்கா எச்சரித்தது.

மூலக்கதை