இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து

தினமலர்  தினமலர்
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு கடலோர காவல் படை தீவிர ரோந்து

கடலுார்:இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தமிழக கடலோர பகுதியில், கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடலுார் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கடர்கரையோர பகுதிகள் மற்றும் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் தேவனாம்பட்டினம், கடலுார் துறைமுகம், சோனங்குப்பம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேக நபர்கள், மர்ம படகுகளின் நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர். அப்போது, சந்தேக நபர்கள், புதிய நபர்கள் வருகை குறித்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு மீனவ கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர்.

மூலக்கதை