ராகுல் மீது வழக்கு ; லலித்மோடி

தினமலர்  தினமலர்
ராகுல் மீது வழக்கு ; லலித்மோடி

லண்டன் : திருடர்கள் அனைவரின் பெயரும் மோடி என்று இருக்கிறது என கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தனது பிரசாரத்தில், திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற வார்த்தை இருக்கிறது என்று பேசினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நிதிமுறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது டுவிட்டர் பதிவில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போவதாகவும் 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது 'காந்தி குடும்பம்' தான் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, ராகுலின் இந்த விமர்சனம், குறிப்பிட்ட ஒரு பிற்பட்ட சமூகத்தையே குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை