கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் கைது! காலுறைக்குள் சிக்கிய மர்மம்

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் கைது! காலுறைக்குள் சிக்கிய மர்மம்

 

நபர் ஒருவர் விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்றபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவரிடமிருந்து குறித்த தங்க பிஸ்கெட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
குறித்த நபர் தனது காலுறைகளை பயன்படுத்தி தனித்தானியாக பொதி செய்து விமானநிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போது அவரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென தெரிவித்துள்ளனர்.
 
குறித்த நபர் வத்தளையை சேர்ந்த 23 வயதுடைய நபரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
தனது காலுறைகளை பயன்படுத்தி தனித்தானியாக பொதி செய்து விமானநிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்ட போது அவரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

மூலக்கதை