குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்

PARIS TAMIL  PARIS TAMIL
குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்

 ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார்.

 
இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
 
 
 
இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று வெற்றி கிடைத்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடிப்பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். 
 
இயக்குனர் சத்தீஷ்வரன் கதை மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார் போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

மூலக்கதை