Neuilly - எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Neuilly  எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு!!

நேற்று திங்கட்கிழமை இரவு Neuilly உல் உள்ள Charles-de-Gaulle வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பல மணிநேர போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. 
 
17:30 மணி அளவில், எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு Monoprix des Sablons உட்பட அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, அனைவரையும் வெளியேற்றினர். 
ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர்களால் பலமணிநேரம் போராடியும் எரிவாயு கசிவினை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதும் 20:00 மணி அளவில் தடைகள் நீக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டது. எரிவாயு கசிவு ஏற்பட்டது போன்ற மணம் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிக்கமுடியவில்லை.

மூலக்கதை