பிரித்தானிய பெண்ணிற்கு டுபாயில் சிறைதண்டனை!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானிய பெண்ணிற்கு டுபாயில் சிறைதண்டனை!

டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார்.
 
எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார்.
 
இந்தநிலையில் தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ‘நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என பதிவிட்டுள்ளார்.
 
டுபாயின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகின்றது.
 

மூலக்கதை