தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 91 வயதான சிலம்பொலி செல்லப்பன் வயது  மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.  'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டு இருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அனைவராலும் அறியப்பட்டவர்.  நூல்களின் திறனாய்வுக்குப் பெரும்பாலும் மேலைநாட்டு அறிஞர்களின் மேற்கோள்களையே அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் அதை முழுமையாகத் தவிர்த்தவர் சிலம்பொலி செல்லப்பன். தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும்.  செம்மொழியான தமிழ் மொழிக்கு இணையாக வேறெந்த மொழியையும் ஏற்றுக் கொள்ளாத பண்பினைக் கடைபிடித்தவர் சிலம்பொலி செல்லப்பன். மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்.  வயது மூப்பின் காரணமாக அவர் மரணம் அடைந்தமைக்காக வலைத்தமிழ் பெரிதும் வருந்துகிறது.அதற்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 91 வயதான சிலம்பொலி செல்லப்பன் வயது  மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். 

'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டு இருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அனைவராலும் அறியப்பட்டவர். 

நூல்களின் திறனாய்வுக்குப் பெரும்பாலும் மேலைநாட்டு அறிஞர்களின் மேற்கோள்களையே அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் அதை முழுமையாகத் தவிர்த்தவர் சிலம்பொலி செல்லப்பன்.

தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும். 

செம்மொழியான தமிழ் மொழிக்கு இணையாக வேறெந்த மொழியையும் ஏற்றுக் கொள்ளாத பண்பினைக் கடைபிடித்தவர் சிலம்பொலி செல்லப்பன். மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 

வயது மூப்பின் காரணமாக அவர் மரணம் அடைந்தமைக்காக வலைத்தமிழ் பெரிதும் வருந்துகிறது.அதற்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மூலக்கதை