டெல்லியில் போலீசார் அனுமதி மறுப்பு தேர்தல் பேரணி ரத்து கெஜ்ரிவால் கொந்தளிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் போலீசார் அனுமதி மறுப்பு தேர்தல் பேரணி ரத்து கெஜ்ரிவால் கொந்தளிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவால் பிரசார பேரணியை தொடங்குவதாக இருந்தது. ஆனால், போலீசார் அனுமதி மறுப்பால் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லி போலீசார் மூலம் பா.ஜ எனது பேரணியை ரத்து செய்துவிட்டது. எனது பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பா.ஜ பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் பா.ஜவின் தோல்வி பயம் வெளியே வந்துவிட்டது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இப்போதே தோல்வியை பா.ஜ ஒப்புக்கொண்டுவிட்டது. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். இதுகுறித்து அவரிடம் இப்போது பொதுமக்கள் கேட்க தொடங்க விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை