ஷோபாவை திருமணம் செய்தாரா எடியூரப்பா? : கேரவன் பத்திரிகை தகவலால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
ஷோபாவை திருமணம் செய்தாரா எடியூரப்பா? : கேரவன் பத்திரிகை தகவலால் பரபரப்பு

பெங்களூரு : கர்நாடக முதல்வராக எடியூரப்பா, எம்.பி. ஷோபா கரந்தலாஜேவை திருமணம் செய்துக் கொண்டதாக டைரியில்  எழுதி வைத்துள்ளதாகவும் கேரவன் பத்திரிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில்  ‘தி கேரவன்’ என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,  கர்நாடக முன்னாள்  முதல்வர் எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறை கைபற்றிய டைரியில்  எடியூரப்பா தனது கைப்பட எழுதியுள்ள தகவல் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.  அதில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது சம்பாதித்த பணத்தில் பாஜ  தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக  தெரிவித்திருந்தது. இந்த தகவல் பாஜ வட்டாரத்தில் அதிர்ச்சியும்  கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பத்திரிகை  வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2016ல் பாஜ எம்.பி. ஷோபா  கரந்தலாஜேவை கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இந்து முறைப்படி  எடியூர் சித்தலிங்கசாமி பெயரில் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று அந்த  டைரியில் எடியூரப்பா எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான விமர்சனத்திற்கு  இதுவரை எடியூரப்பா, ஷோபா பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பதாகவும் தி  கேரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மூலக்கதை