இலங்கை மக்களுக்கு நாளை முதல் ஏற்படவுள்ள புதிய சிக்கல்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை மக்களுக்கு நாளை முதல் ஏற்படவுள்ள புதிய சிக்கல்!

இலங்கையில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காலை அல்லது மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையில் மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையில் அல்லது இரவு 7.30 முதல் – இரவு 8.30 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
 
தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மூலக்கதை