வடகொரியா மீதான கூடுதல் தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வடகொரியா மீதான கூடுதல் தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா: வடகொரியா மீது விதித்த  சமீபத்திய தடைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வந்ததால் அந்நாட்டின் மீது ஐநா சபை பொருளாதார தடை விதித்திருந்தது. பன்னாட்டு பொருளாதார தடைகளை மீறி சீனாவிடம் இருந்து நிலக்கரி வாங்கியதால் வடகொரியா மீது கூடுதலான தடைகளை அமெரிக்கா சமீபத்தில் விதித்திருந்தது.இந்நிலையில் இந்த தடையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜுங் மீதான அன்பின் காரணமாக ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமெரிக்கா அதிபரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை