யாழில் மர்ம கும்பல் அட்டகாசம்! அதிர்ச்சியில் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் மர்ம கும்பல் அட்டகாசம்! அதிர்ச்சியில் மக்கள்

யாழ். அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அத்துடன், பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று அதிகாலை அடையாளந்தெரியாத சிலர் வீட்டிற்குள் புகுந்து தந்தையையும் மகனையும் தாக்கியுள்ளனர்.
 
அத்துடன், வீட்டிலிருந்த தங்காபரணங்கள், பணம் மற்றும் மோட்டார் சைக்கிளொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தாக்குதலுக்குள்ளான இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை