காவல்துறை தலைமையகத்துக்குச் சென்ற பிரதமர்!
இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் எத்துவா பிலிப், பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குச் நேரில் சென்றார்.
இன்று சனிக்கிழமை காலை உள்துறை அமைச்சர் Christophe Castaner, பிரதமர் எத்துவா பிலிப் ஆகியோர் காவல்துறை தலைமையகத்துக்குச் சென்றனர். இன்று கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதிய காவல்துறை தலைமையதிகாரியாக பொறுப்பேற்ற Didier Lallement, இன்று சனிக்கிழமை முதன் முதலாக மஞ்சள் மேலங்கி போராட்டத்தினை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பாதுகாப்பு பணியினை அதிகாரிகள் மேற்கொள்ளுவது குறித்து நேரில் சென்று பார்வையிட்டனர்.