விவசாயி பொன்னையன் உள்ளிட்டோரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு
ஈரோடு: உயரழுத்த மின் கோபுர திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது டிசம்பரில் வழக்குப்பதிந்துள்ள நிலையில் தற்போது கைது செய்வது ஏன்? என ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விவசாயிகள் பொன்னையன், முனுசாமி, கவின் ஆகியோரை சிறையில் அடைக்கவும் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது