நிதி கொள்கை குழு 6 முறை கூடும்

தினமலர்  தினமலர்
நிதி கொள்கை குழு 6 முறை கூடும்

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வரும், 2019- – 20ம் நிதியாண்டில், ஆறு முறை கூடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நாட்டின் சில்லரை பணவீக்க நிலவரத்திற்கு ஏற்ப, வங்கிகளின் வட்டி நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வெளியிடுகிறது.வரும் நிதியாண்டில், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையிலான, நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம், ஏப்., 2-4 வரை நடைபெறும். கொள்கை முடிவுகள், 4ம் தேதி அறிவிக்கப்படும்.

ஜூன், 3, 4 மற்றும் 6ல் இரண்டாவது கூட்டம் நடைபெறும். இதையடுத்து, ஆகஸ்ட், 5-, 7; அக்டோபர், 1-, 3; டிசம்பர், 3,- 5 மற்றும் இறுதிக் கூட்டம், 2020 பிப்ரவரி, 4-, 6ல் நடைபெறும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

மூலக்கதை