உறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா

தினமலர்  தினமலர்
உறியடி 2  உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா

உறியடி முதல்பாகம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விஜய்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளர். கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், இசை வெளியானது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது : சினிமாவில் ஒருவர் இவ்வளவு உண்மையாக, நேர்மையாக இருக்க முடியுமா என்பதை விஜய்யை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். என் அப்பா எனக்காக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது கிடையாது. கதை கேட்டது கிடையாது. ஆனாலும் ஒரு நடிகனின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருந்தது. ஆனால், இது எதுவுமே இல்லாமல் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் உறியடி படம் இயக்கியிருக்கிறார் என்றால் அதுதான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

உறியடி இரண்டாம் பாகத்தை தயாரித்தது மகிழ்ச்சி. கோவிந்த் வசந்தா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படம் உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்காது. உங்களை யோசிக்க வைக்கும்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

மூலக்கதை