நீஸ் நகரில் பரபரப்பு! - ஆறு போராளிகள் கைது! - பரிசில் 31 பேர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
நீஸ் நகரில் பரபரப்பு!  ஆறு போராளிகள் கைது!  பரிசில் 31 பேர் கைது!!

பரிஸ் நகரில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீஸ் நகரிலும் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், நீஸ் நகரில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மேலங்கி போராளிகள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். குறிப்பாக Garibaldi Square கட்டிடத்தில் போராளிகள் பலர் காலை முதல் குவிய தொடங்கியிருந்தார்கள். காவல்துறையினரும் ஜோந்தாமினரும் போராளிகளை சுற்றி வளைத்து, அவர்களை முடக்கினர். பின்னர் அங்கிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் காவல்துறையினருக்கும் மஞ்சள் மேலங்கி போராளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. காலை 11:30 மணி அளவில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
தொடர்ந்து, பரிசிலும் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி பரிசில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை