Fontainebleau : கட்டுப்பாட்டை இழந்து மதுச்சாலைக்குள் பாய்ந்த மகிழுந்து! - மூவர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Fontainebleau : கட்டுப்பாட்டை இழந்து மதுச்சாலைக்குள் பாய்ந்த மகிழுந்து!  மூவர் காயம்!!

Fontainebleau பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர். மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மதுச்சாலைக்குள் நுழைந்துள்ளது. 
 
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக இடம்பெற்றுள்ளது. Place de la République இல் நிழகீழ் தரிப்பிடத்தில் இருந்து வேகமாக வெளியேறிய குறித்த மகிழுந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மதுச்சாலைக்குள் இடித்துத்தள்ளிக்கொண்டு நுழைந்துள்ளது. இதனால் வீதியில் நின்றிருந்த ஒருவர், மதுச்சாலைக்குள் இருந்த நபர், சாரதி என மொத்தம் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் வீதியில் சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
35 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, மீட்புப்பணி இடம்பெற்றது. Seine-et-Marne நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூலக்கதை