சோம்ப்ஸ்-எலிசேக்குள் நுழைய தடை! - உச்சக்கட்ட பாதுகாப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசேக்குள் நுழைய தடை!  உச்சக்கட்ட பாதுகாப்பு!!

மஞ்சள் மேலங்கி போராளிகள் சோம்ப்ஸ்-எலிசேக்குள் நுழைய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இன்று வெள்ளிக்கிழமை பரிஸ் நகர காவல்துறை தலைமை அதிகாரி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த வார சனிக்கிழமை இடம்பெற்ற 18 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கட்டுக்கடங்காத வன்முறை இடம்பெற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சோம்ப்ஸ்-எலிசேக்குள் இரு புறக்களிலும் தடுப்பு ஏற்படுத்தி, இராணுவத்தினர் நடமாடும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு துப்பாக்கி பிரயோக அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்தவார சனிக்கிழமை €30 மில்லியன் யூரோக்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை