கர்நாடக அமைச்சர் சிவஹள்ளி காலமானார்

தினகரன்  தினகரன்
கர்நாடக அமைச்சர் சிவஹள்ளி காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தார்வார்  மாவட்டம், குந்தகோளா தாலுகாவை சேர்ந்தவர் சி.எஸ்.சிவஹள்ளி. கடந்த 2018ல் நடந்த சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ்  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எச்.டி.குமாரசாமி தலைமையிலான  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமனம்  செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று பகல் திடீரென அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரை  கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர  சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு முதல்வர் குமாரசாமி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அவரது இறுதி சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடக்கிறது.

மூலக்கதை