மத்திய அரசு அதிரடி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காஷ்மீரில் பிரிவினைவாத கும்பலுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை