டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

தினகரன்  தினகரன்
டெல்லியில் ஜெய்ஷ்இமுகமது தீவிரவாதி கைது

புதுடெல்லி:  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனின் கூட்டாளி டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முதாசீர். இவன் சமீபத்தில் நடந்த என்கவுன்டரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டான். இந்நிலையில் இவனது நெருங்கிய கூட்டாளியாக சஜ்ஜித் கான் இருந்துள்ளான். டெல்லியில் தீவிரவாதிகளை உருவாக்க முதாசீரால் சஜ்ஜனுக்கு கட்டளையிடப்பட்டதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட சஜ்ஜனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை