கப்பலில் மாரடைப்பு பயணியை மீட்டது கடலோர காவல்படை

தினகரன்  தினகரன்
கப்பலில் மாரடைப்பு பயணியை மீட்டது கடலோர காவல்படை

மும்பை:  கேரளமாநிலம் கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி  ஆர்எம்எஸ் எம்வி குயின்மேரி 2 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்தை சேர்ந்த 67 வயது முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மும்பை கடலோர காவல்படைக்கு அவசர மருத்துவ உதவி தேவை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் கடலோர காவல்படையின் அதிவேக ரோந்து கப்பல் விரைந்தது. குயின்மேரி கப்பலில் இருந்து பாதிக்கப்பட்ட முதியவர் ரோந்து கப்பலுக்கு மாற்றப்பட்டார். உடனடியாக அவர் கோவாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை