சோம்ப்ஸ்-எலிசேயில் கொள்ளை! - ஐந்து மஞ்சள் மேலங்கி போராளிகள் Dordogne இல் கைது!!
கடந்த சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலங்கி போராளிகள் சிலர் கடைகளை உடைந்து ஆடம்பர பொருட்கள் ஆடைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் Dordogne நகரில் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை Bergerac (Dordogne) நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 தொடக்கம் 50 வயது வரையான ஐவரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் இருவர் நேரடியாக சோம்ப்ஸ்-எலிசேயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், மற்றைய மூவர் கடந்த டிசம்பர் மாதம் பொது சொத்தினை எரியூட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் 260,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் வேறு சில கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.