வீட்டுக்குள் நுழைந்த திருடன் - சிறுவனை பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு தப்பியோட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வீட்டுக்குள் நுழைந்த திருடன்  சிறுவனை பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு தப்பியோட்டம்!!

வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் ஒருவன், வீட்டில் இருந்த சிறுவனை பணயக்கைதியாக பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டி 1 மணி அளவில், Saint-Lazare இல் உள்ள வீடு ஒன்றுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துள்ளான். சிறுவன் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த திருடன், அங்கிருக்கும் பொருட்களை துலாவிக்கொண்டிருக்கும் போது, சத்தம் கேட்டு சிறுவன் எழுந்துள்ளான். இதனால் வேறு வழி இல்லாமல் சிறுவனை பணயக் கைதியாக கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பிடித்துக்கொண்டான். பின்னர் அவனது தாயாரை மிரட்டி, நகைகளையும் பணத்தினையும் ஒரு பைக்குள் திணித்து தரும்படி தெரிவித்து, அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் திருடனை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். திருடன் கைது செய்யப்படும்போது, பிறிதொரு கட்டிடத்தில் ஏறிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலக்கதை