1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது

தினமலர்  தினமலர்
1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது

சியோல்: தென்கொரியாவில் உள்ள ஹோட்டல் ரூம்களில் தங்கிய 1,600 பெண்களை, ரகசிய கேமிரா மூலம், ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அந்நாட்டின் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள பிரபல ஹோட்டல்களின் ரூம்களில், ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்ததை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்தனர். ஹோட்டல் ரூம்களில் உள்ள டி.வி.க்கள், சுவர் இடுக்குகளில் கேமிராவை பொருத்தி, குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை