கம்ப்யூட்டர் பழுதானதால் ரயில் பயணிகளுக்கு இலவச பயணம்

தினகரன்  தினகரன்
கம்ப்யூட்டர் பழுதானதால் ரயில் பயணிகளுக்கு இலவச பயணம்

திருவனந்தபுரம்: கம்ப்யூட்டரில்  பழுது ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் இலவசமாக  பயணம் செய்தனர். திருவனந்தபுரம் அருகே முருக்கும்புழா ரயில்  நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பல்வேறு  இடங்களுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் மதுரை-புனலூர்,  கொல்லம்- திருவனந்தபுரம் ஆகிய 2 ரயில்களில் செல்வதற்காக பயணிகள் வந்தனர்.  அவர்கள் டிக்கெட் எடுக்க முயன்றபோது திடீரென கம்ப்யூட்டர் பழுதானது. நீண்ட  நேரம் முயற்சித்தும் பழுதை நீக்க முடியவில்லை.  இந்த நிலையில் 2  ரயில்களும் பிளாட்பாரத்துக்கு வந்தன. பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியாத  நிலை ஏற்பட்டதால் பயணிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என ஸ்டேஷன்  மாஸ்டர் கூறினார். மேலும் டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்டால் தன்னை  தொடர்புக் கொள்ளுங்கள் என கூறி தனது செல்போன் நம்பரை கொடுத்தார். இதையடுத்து  2 ரயில்களிலும் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலவசமாக  பயணம் செய்தனர்.

மூலக்கதை