படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலியான சோகம்! 20 பேர் மாயம்
ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
எனினும், படகில் சிக்கியிருந்த எஞ்சியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ள நிலையில், குறித்த படகு ஒரு சுற்றுலாத் தீவுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பாதிக்கபட்டோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.