மஞ்சள் மேலங்கி போராட்டம்! - வீதிகளில் நடமாடும் சேவையில் இராணுவத்தினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மஞ்சள் மேலங்கி போராட்டம்!  வீதிகளில் நடமாடும் சேவையில் இராணுவத்தினர்!!

வரும் சனிக்கிழமை இடம்பெறும் மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், இராணுவத்தினர் நடமாடும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அளவு கடந்த வன்முறை இடம்பெற்றதால், அரச தரப்பில் பரிசின் பல பகுதிகளின் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 19 ஆவது வார ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் தடைசெய்யப்பட்ட இடங்களில் இடம்பெறலாம் அல்லது மஞ்சள் மேலங்கி போராளிகள் ஒன்றுகூடலாம் என தெரிவிக்கப்பட்டு, இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு சார்லி எப்த்தோ பத்திரிகை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து இராணுவத்தினர் எல்லைகளில் நடமாடும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது மீண்டும் பரிசுக்குள் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மூலக்கதை