A15 - நடு வீதியில் கிடந்த படகு! - போக்குவரத்து தடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
A15  நடு வீதியில் கிடந்த படகு!  போக்குவரத்து தடை!!

நடு வீதியில் கிடந்த படகு ஒன்றினால் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை Argenteuil (Val d'Oise) இனை ஊடறுக்கு A15 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.   இந்த காட்சியினை பல்வேறு வாகன சாரதிகள் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். கனரக வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட சிறிய இயந்திர படகு ஒன்று, அதிலிருந்து நடு வீதியில் விழுந்துள்ளது. இதனால் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.  குறித்த வாகனம், Cergy இல் இருந்து பரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
A15 நெடுஞ்சாலையை ஊடறுக்கும் Gennevilliers Viaduct  மேம்பாலத்துக்கு அருகே இடம்பெற்றதால், இது சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. கடந்த ஆறு மாதங்களாக குறித்த மேம்பாலம் மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த போக்குவரத்து தடை எரிச்சலை ஏற்படுத்தியதாக பயணிகள் பலர் குறிப்பிட்டனர். 
 

மூலக்கதை