பெசன்ட்நகரில் கடலில் குளித்த மீனவர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெசன்ட்நகரில் கடலில் குளித்த மீனவர் பலி

வேளச்சேரி: சென்னை பெசன்ட் நகர், ஆல்காட் குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் (48). மீனவர்.

இவர் நேற்று எலியட்ஸ் கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவரை ஒரு ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் அவர் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் இறங்கி, உயிருக்கு போராடிய சரவணனை மீட்டனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது சரவணன் கடல் நீரை அளவுக்கு அதிகமாக குடித்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரியவந்தது. சாஸ்திரி நகர் போலீசார், சரவணனின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

.

மூலக்கதை