ஆசியா மிக்சட் பேட்மின்டன்: சிங்கப்பூரிடம் இந்தியா தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசியா மிக்சட் பேட்மின்டன்: சிங்கப்பூரிடம் இந்தியா தோல்வி

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்து வரும் ஆசியா மிக்சட் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரிடம் தோல்வியடைந்தது. ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய், சிங்கப்பூர் வீரர் கீன் லீ வோவை 21-8, 12-21, 21-17 என்ற 3 செட்களில் போராடி வென்றார்.

ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜுன் மற்றும் ராமச்சந்திரன் 21-16, 21-18 என நேர் செட்களில் சிங்கப்பூர் ஜோடி லோ கின் ஹீன் மற்றும் கிறிஸ்டினான்டாவை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இருப்பினும் கலப்பு இரட்டையர் பிரிவு, மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அர்ஜுன் மற்றும் ரூடாபர்னா 16-21, 13-21 என நேர் செட்களில் கிறிஸ்டினான்டா-டான் வீ ஹானிடம் தோல்வியடைந்தது.

மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா, சிங்கப்பூரின் யோ ஜியாமினுடன் மோதினார்.

முதல் செட்டை அஷ்மிதா 21-17 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றினார். ஆனால் எழுச்சியுடன் ஆடிய யோ ஜியாமின் தொடர்ந்து 2வது மற்றும் 3வது செட்டை 21-12, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி, போட்டியில் வாகை சூடினார்.

மகளிர் இரட்டையரில் ஆர்த்தி சாரா-ருடாபர்னா ஜோடி 24-22, 15-21, 16-21 என்ற கணக்கில் சிங்கப்பூர் ஜோடி புட்ரி சவி மற்றும் லிம்மிங் ஹூயிடம் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியால் இந்திய அணி, அடுத்து இன்று நடைபெற உள்ள சீன ைதபே அணிக்கு எதிரான போட்டிகளை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

.

மூலக்கதை