ஒருநாள் தொடரில் தோல்வி இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி: ராகுல் டிராவிட் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருநாள் தொடரில் தோல்வி இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி: ராகுல் டிராவிட் பேட்டி

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை  இழந்தது, உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி நன்றாகவே ஆடி வருகிறது.

இருப்பினும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என தொடரில் முன்னிலை பெற்ற பின்னர்  வரிசையாக 3 போட்டிகளில் தோல்வி என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

சொந்த மண்ணில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

அடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள நிலையில், இந்த தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், அதே எளிதான மனப்பான்மையோடு உலகக்கோப்பை போட்டிகளுக்கு செல்லும்.

இப்போது இந்த தோல்வியால் உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் மிக மிக நன்றாக ஆட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டிருக்கும்’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை