உலக தலைவர்களை மோடி கட்டிப் பிடிச்சதுதான் மிச்சம்: பாஜ மாஜி அமைச்சர் காட்டம்
பாஜ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, மோடிக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை கூறிவருவார். தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி மீண்டும் பிரதமராக எதிர்ப்பு தெரிவித்து அவர் கூறியதாவது: மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தால், கடைசியாக உள்ள தேர்தல் என்ற ஜனநாயக அமைப்பையும் முழுமையாக அழித்துவிடுவார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு மோடிதான் காரணம்.
இந்தப் பிரச்னையால் வளர்ச்சி குறைந்து வேலைவாய்ப்பும் அதிகரித்து விட்டது. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது.
ஜிஎஸ்டியால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. உலகத் தலைவர்களை சந்தித்து கட்டிப் பிடித்தது மட்டுமே நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.