ரத்தத்துடன் ஹோலியா?: பாஜவுக்கு மம்தா பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரத்தத்துடன் ஹோலியா?: பாஜவுக்கு மம்தா பதிலடி

மேற்கு வங்கத்தில் ஹோலி பண்டிகை வருவதையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்ேகற்ற, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அப்போது கூறியதாவது:என்னுடைய மதம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ‘எனது மதம் மனிதநேயம்’ என அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மதம் பற்றிய மற்றவர்களின்  சொற்பொழிவுகள் எனக்கு தேவையில்லை. மேற்கு வங்கத்தில் பூஜைகளை செய்ய நான் அனுமதிப்பதில்லை என்று பாஜவினர் என்னை நோக்கி கைகளை  உயர்த்தி கூறுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில், மாநிலத்தில் எத்தனை கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன என்று அவர்களே சென்று காணட்டும்.  

ஹோலி பண்டிகையை வண்ண பொடிகளுடன் கொண்டாடுவதில் நம்பிக்கை கொண்டவள் நான்.

சில பிரிவினரை போன்று பிறரின் ரத்தத்துடன் ஹோலி  கொண்டாடுபவள் நான் இல்லை. பாஜ.

போன்ற பிரிவினை சக்திகளிடம் இருந்து சமூக நல்லிணக்கத்தின் அர்த்தத்தை நான் கற்றுக் கொள்ள வேண்டிய  அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்

.

மூலக்கதை